உள்நாடு

புதிய பிரதமராக ஹரிணி நியமனம்

இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய சற்று முன்னர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

25ஆண்டுகளின் பின் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்குப் பிறகு இலங்கையின் பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். மனித உரிமை ஆர்வலர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதி என்று பலமுகங்களுடன் இவர் செயல்பட்டார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

2019ஆம் ஆண்டு முதல் இவரின் அரசியல் பிரவேசம் இருந்துவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *