உள்நாடு

பிரதமரின் கீழ் இயங்கும் அமைச்சொன்றின் செயலாளராக நயீமுத்தீன் (நளீமி)

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், இன்று (24) நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்களின் கீழ் வரும் அமைச்சுக்களில் ஒரு அமைச்சுக்கு முஸ்லிம் ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதன்படி, சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எம். நயீமுத்தீன் (நளீமி), வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த அமைச்சு, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *