உள்நாடு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித்தைச் சந்தித்தார்

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு, நேற்று (23) மாலை சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கர்த்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித்தை நேரில் சென்று சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

இந்தச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த பேராயர், “இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
​​
இலங்கையில் மிகவும் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை, நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். இது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். அதற்காக, அவருக்கு முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்ப எப்பொழுதும் தமது பூரண ஆதரவை வழங்கத் தயாராகவும் இருக்கிறேன்” என்றும், பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மேலும் கூறியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *