உள்நாடு

ஜனாதிபதியாக தெரிவான அநுரகுமார திசாநாயக்கவுக்கு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் வாழ்த்து தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் ஏகோபித்த மக்கள் அபிமானங்களை வென்று பெரும்பான்மையான வாக்குகளை பெற்று இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 09வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது நாடு பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் சவாலான இக்கால கட்டத்தில் மக்கள் ஆணை மூலம் ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது சகல இன மக்களின் எதிர்பார்ப்புடன் நாட்டை முன்னோக்கி சவால்களை வென்று இலக்கினை அடைவீர்கள் என எதிர்பார்ப்பதோடு உங்களின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

மேலும் எமது கட்சியின் தலைமை ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர் கட்சி தலைவருமான கௌரவ சஜித் பிரமதாஸ அவர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்தார்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *