உள்நாடு

அனுரவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேருவளையில் பெனர்கள், சுவரொட்டிகள்..!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை வாழ்த்தி பேருவளை பகுதியில் பல இடங்களில் பெனர்கள் தொங்கவிடப்பட்டுள்ளதோடு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பேருவளை நகர சபை பகுதியில் பல பகுதிகளுக்கும் பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் அல்-ஹாஜ் அரூஸ் அஸாத் நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தும் வருகிறார்.

தேசிய மக்கள் சக்தி இத்தேர்தலில் பேருவளை தொகுதியை 44,146 வாக்குகளைப் பெற்று கைப்பற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தி மீதும் வைத்த பூரண நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றியாகும் என அரூஸ் அஸாத் தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *