உள்நாடு

நேபாளம் சென்றார் கோத்தாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, நேற்று (23) திங்கட்கிழமை மாலை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார்.

அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து பரத்பூருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணம், அவரது தனிப்பட்ட பயணம் என்பதோடு, இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள ‘சவுத்ரி குழு’ மத்துடன் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ‘சவுத்ரி குழுமம்’ விடுத்த அழைப்பின் பேரிலேயே கோத்தாபய நேபாளத்துக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாபய ராஜபக்க்ஷ நேற்று இரவு, (23) ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் தங்குகிறார் எனவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *