விளையாட்டு

சம்பியன் அணிக்கு 2.34 மில்லியன் டொலர் பரிசுத் தொகை; டுபாய் பயணமானது இலங்கை அணி

10 அணிகள் பங்கேற்கும் 9வது ஐ.சி.சி. மகளிர் ரி 20 உலகக்கிண்ண தொடர் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் அடுத்த மாதம் 3ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தொடரின் பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.34 மில்லியன் டொலரும், ரன்னர் அப் அணிக்கு 1.17 மில்லியன் டொலரும், அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு 6 இலட்சத்து 75 ஆயிரம் டொலரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொடரில் பங்கேற்கவுள்ள சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி நேற்றைய தினம் இரவு இலங்கையிலிருந்து டுபாய் பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *