உள்நாடு

நரேந்திர மோடி அனுரவுக்கு வாழ்த்து

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, X சமூக ஊடகப் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் குறிப்பிடுகையில், “இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டைநாட்டுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. எமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன் “.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *