உள்நாடு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் பதவியேற்பு நிகழ்வை யோகட் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடிய ஓட்டமாவடி மக்கள்

ஓட்டமாவடி பிரதான வீதியில் ஒன்று கூடிய கல்குடா தொகுதி ஆதரவாளர்கள் அப்பகுதியால் பயணித்த அனைவருக்கும் யோகட் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கு ஆதரவளித்து கல்குடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டு தனது தலைமையில் ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த தொழில் அதிபரும் அகீல் எமெர்ஜென்சி அமைப்பின் ஸ்தாபகர் எம்.ஏ.சி.நியாஸ் ஹாஜியாருக்கும் அவருடன் சேர்ந்து உழைத்தவர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டோர் கை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *