உள்நாடு

ஐக்கிய முண்ணனி கட்சியின் தலைவர் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவுக்கு ஶ்ரீ லங்கா ஐக்கிய முண்ணனி கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்யக் மெளவலவி சதீக் (முப்தி) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் 9வது ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்து கொண்ட கெளரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிப்பதாகவும் இலங்கை வரலாற்றில் மிகவும் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பலதசாப்த காலமாக பயணித்த முயற்சியின் பலனே இந்த வெற்றியாகும் என்றும் இதனை தான் பராட்டுவதாகவும் அத்துடன் நாட்டு மக்கள் ஒண்றிணைந்தது அரசியலில் ஒரு மாற்றம் தேவை ஊழற்ற அரசாங்கம் உருவாக்க வேண்டும் அண்றாட உணவு பொருட்களின் விலைவாசி குறைக்க படவேண்டும் , நீதி நேர்மை இருக்க வேண்டும் மற்றும் சிறந்த திட்டங்களை வைத்து நாட்டை முன்னேற்றி செல்வர் என்ற நம்பிக்கையின் பிரகாரம் இந்த அழகிய இலங்கையை கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள். அத்துடன் கெளரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சிறந்த முறையில் இனம் மதம் பாராது அணைத்து மக்களையும் சம உரிமையுடன் இந்த நாட்டை ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை உண்டு என்றும் நாட்டு மக்களின் நலனுக்காக எந்நேரமும் கெளரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் இணைந்து பயணிக்க தான் தயார் நிலையில் உள்ளதாக ஶ்ரீ லங்கா ஐக்கிய முண்ணணி கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக்(முப்தி) தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *