பதவி விலகினார் சதோச அமைப்பின் தலைவர்
சதொச அமைப்பின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோவுக்கு தனது இராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளார். புதிய ஜனாதிபதிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கி அவர் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.