உள்நாடு

அலபத்தாவ சந்தி விபத்தில் ஒருவர் பலி..! ஒருவர் பலத்த காயம்..!

அனுராதபுரத்திலிருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

 அனுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் அலபத்தாவ சந்தியில் (22) அதிகாலை கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதுடன் அதில் பயணித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரவப்பொத்தானை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் ஹொரவப்பொத்தானை பத்தாவ பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.றிஸ்வான் என்ற (42) வயதுடையவராவர்.

இதே வேளை விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரவப்பொத்தானை பிரதே சபை முன்னாள் உறுப்பினரான நிக்கவெவ பிரதேசத்தைச் சேர்ந்த என்.எம்.பாஷில் (ஆசிரியர்) பலத்த காயத்திற்குள்ளான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *