உள்நாடு

NPP இன் வெற்றியை இகழ்ச்சிபடுத்த வில்லை ஆனால் அதிகாரிகள் தவறு செய்துள்ளனர்

SJB ஆணைக் குழுவில் முறைப்பாடு

வாக்குகளால் வெற்றி பெற்ற கட்சியின் வெற்றியை இகழ்ச்சி படுத்த நாம் விரும்பவில்லை ஆனால் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து வாக்கு எண்ணப்படும் நேரம் வரை சில அதிகாரிகளால் முறைகேடான விடயங்கள் இடம்பெற்றுள்ளமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன என SJB சார்பில் ஜனரஜ பெரமுன கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க
இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்

தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணப் படுவதற்கு முன் சில வாக்கெண்ணும் அதிகாரிகள் வாக்குச் சீட்டுகளில் விருப்பு வாக்குகளை பதிவு செய்துள்ளமையால் எமது வேட்பாளருக்கு அநீதி ஏற்படுவதால் இவ்விடயமாக குறித்து நாம் முறைப்பாடு செய்தோம் எனவும் அவர் தெவித்தார்.

அத்துடன் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 84 இலட்சம் வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த அவர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *