உள்நாடு

பறகஹதெனியவில் வாக்களிப்பு சுமுகம்..!

தேர்தல் வாக்களிப்பு மிகவும் சுமூகமான முறையில்
குருநாகல் மாவட்டத்தில் மாவத்தமக தேர்தல் தொகுதியில் பறகஹதெனிய வாக்குச் சாவடியில் காலையில் சரியாக 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12 வரையிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி மிக அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு வந்து மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதை இங்கு காணக் கூடியதாக இருக்கிறது.
இங்கு 977 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் 14 தேர்தல் தொகுகளில் இருந்து 1417626 பேர் வாக்களிக்கத்;;;; தகுதி பெற்று இருக்கிறார்கள்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *