உள்நாடு

பேருவளை பகுதியில் ஜனாதிபதி தேர்த்தலுக்கான வாக்களிப்பு சுமுகம்..!

பேருவளை பகுதியில் ஜனாதிபதி தேர்த்தலுக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியாகவும், சுறுசுறுப்பாகவும் இடம்பெற்றது. காலை 7:00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

பேருவளை தொகுதியில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களான தர்காநகர், மருதானை, மஹகொடை, மாளிகாஹேன, மொல்லியமலை, மஸ்ஸல, சீனங்கோட்டை, மக்கொனை ஆகிய பகுதிகளில் காலை வேளையிலேயே வாக்களிப்பானது சுறுசுறுப்புடன் காணப்பட்டது.

கடந்த தேர்தல்களை விட இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினர்.

வாக்கு சாவடிகளுக்கு வயோதிபர்கள், அங்கவீனர்கள் முச்சக்கர வண்டி மற்றும் வாகனங்களில் வந்து வாக்களிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. விஷேட ரோந்து சேவைகள் இடம்பெற்றது. நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய பொலிஸார் வாகாகுச் சாவடிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *