உள்நாடு

மொட்டுக் கட்சியிலிருந்து மூவர் அதிரடியாக நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் கட்சிப் பதவிகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *