உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.ஆர்.ரத்னாயக

நாளை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதுடன் குருநாகல் மாவட்டத்தில் வாக்களிப்புக்காக சகல பெட்டிகளும் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி ஆர்.எம்.ஆர். ரத்நாயக தெரிவித்தர்.

இம்மாவட்டத்தில் 14 தேர்தல் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் இருந்து 14,17226 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக என்று மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி ஆர். எம். ஆர். ரத்நாயக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “இம்மாவட்டத்தில் 977 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாக்குகள் எண்ணுவதற்காக 04 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் குருநாகல் தொழில் நுட்பக் கல்லூரி, சேர் ஜோன் கொத்தலாவெல கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, மலிய தேவ பெண்கள் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் இந்த வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் கடமைக்காக சகல போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *