உள்நாடு

இன்று காலை புத்தளம் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று வீதிக்கு செலுத்த முற்பட்ட லொறியில் மோதி விபத்துக்குள்ளாகி பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது பஸ்ஸின் மிதிப்பலகையில் நின்றுக் கொண்டிருந்த இருவர் தவருதலாக வீழ்ந்துள்ள நிலையில் ஒருவர் மீது பஸ் ஏற்றிச் சென்றுள்ள நிலையில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது மற்றுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் ஆறாம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ 18ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவரென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

(முஷ்பிக் – புத்தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *