உள்நாடு

நிந்தவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டார தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

பொத்துவில் தொகுதியிலுள்ள நிந்தவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வட்டார குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 2024.09.17 ம் திகதி மாலை நிந்தவூர் றிலக்ஸ் கார்டனில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரம அதீதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம்.ஐ.ஏ.ஆர். புஹாரி அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களின் வெற்றிக்கு பாடு படுவதோடு கட்சியை எதிர் காலத்தில் வலுவுள்ள அமைப்பாக மாற்றி அமைப்பது சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்ததுடன் வட்டார குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களையும் வழங்கிவைத்தார். சஜித் பிரேமதாசா அவர்களின் மாவட்ட இணைப்பாளர் எம்.எல்.அபுல் ஹசன், நிந்தவூர் செயற்குழு தலைவர் ஏ.எல்.எம்.ஜலீல் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *