உள்நாடு

தலைக்கவசம் திருட்டுக்கும், பணிப் பகிஷ்கரிப்பு

அனுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று இன்று (18) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த (17) இரவு 07.15 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் ஜீ.கே.பீரிஸ் யின் தலைகவசம் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்துக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தில் வைக்கப்பட்டிருந்த தலைக்கவசம் ஒன்று இனம்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் உயிய பாதுகாப்பு இல்லாமையினால் இவ்வாறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அனுராதபுரம் கிளிநொச்சி வரையிலான சில  ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் ரயில் நிலைய பொறுப்பதிகாரி கே.சீ.ஆர்.நவரத்ன தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *