உள்நாடு

இரண்டு தேசபந்து விருதுகள் பெற்று பேருவளை மண்ணிற்கு பெருமை சேர்த்தது பேருவளை நியூஸ்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ,தேசிய கலை அரன் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் ஏற்பாட்டில் கடந்த 16 ஆம் திகதி , கொழும்பு BMICH இல் நடைப்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பேருவளை நியூஸ் ஊடக வலையமைப்பு, இரண்டு லங்காபுத்ர தேசபந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்னபிரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேருவளை நியூஸ் ஊடக வலையமைப்பு நிர்வாகத்தின், பணிப்பாளர் ஸாபித் துல்பிகார் மற்றும் செயலாளர் பாத்திமா ஹஸ்னத் கபீர் ஆகியோர் மக்களின் முரசு லங்காபுத்ர தேசபந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இம்மாபெரும் விருது வழங்கும் நிகழ்வில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல முன்னணி சிரேஷ்ட ஊடக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *