உள்நாடு

இன்று நள்ளிரவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம், இன்று (18) புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது.

“இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர், எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரசாரம் செய்யவிப்பது அல்லது ஊக்குவிப்பது போன்றன, தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும்” என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் தொடர்ந்து இது தொடர்பில் கருத்து வௌியிடுகையில், “நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக, கடுமையான விதி முறைகள் நடைமுறையில் உள்ளன. பிரசார காலம் முடிவடைந்தவுடன் பொதுப் பேரணிகள், விளம்பரப் பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்வது, எவ்வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது.

அத்துடன், எந்தவொரு பிரசாரத்திற்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க, பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *