உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளை ஏற்பாட்டில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான துஆப் பிராத்தனை

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை, புத்தளம் மணல் குன்று பாடசாலை மற்றும் புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிட்சையில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான துஆ பிராத்தனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் கல்விக்குழு தலைவர் அஷ்ஷேக் சல்மான் இஹ்ஸானி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

13.09.2024 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலையில் தரம் 5 தில் கல்வி கற்கும் புலமைப் பரிட்சையில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான துஆ பிராத்தனை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப செயளாலர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபீ மற்றும் புத்தளம் கல்வியாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவையாளர் ஸவ்வாப் கலந்து சிறப்பித்தனர்.

13.09.2024 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு புத்தளம் மணல் குன்று பாடசாலையில் தரம் 5 தில் கல்விக் கற்கும் புலமைப் பரிட்சையில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான துஆ பிராத்தனை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சமூக சேவை உபக்குழுவின் தலைவர் அஷ்ஷேக் சனூஸ் அஷ்ரபீ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

15.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 தில் கல்வி கற்கும் புலமைப் பரிட்சையில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான துஆ பிராத்தனை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப தலைவர் அஷ்ஷேக் அல்காரி ரியாஸ் தேவ்பந்தீ மற்றும் புத்தளம் கல்வியாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவையாளர் ஸவ்வாப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்வி உபக்குழு
தலைவர்
அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் 
நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *