உள்நாடு

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடுகளைச் செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் விசேட தொலைபேசி இலக்கங்களை, தேர்தல்கள் சிக்கல்களைத் தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தொலைபேசி இலக்கங்கள், எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலாக நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தொலைபேசி இலக்கங்களின் மூலம், வாக்குப்பதிவின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை அளிக்க முடியும். அதற்கிணங்க, இராஜகிரியவில் உள்ள தேசிய தேர்தல்கள் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்தத் தொலைபேசி இலக்கங்கள் வருமாறு :

011 2796546

011 2796549

011 2796589

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *