உள்நாடு

வருடாந்த புனித மெளலிதுன் நபி தமாம் மஜ்லிஸ்

பேருவலை சீனன்கோட்டை அல் ஜாமிஅதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரபீயுனில் அவ்வல் மாதம் 12 தினங்கள் நடைபெற்ற புனித ஹரீரி மெளலித், ஸுப்ஹான மெளலித் மஜ்லிஸின் தமாம் 15.09.2024 ஞாயிறு பின்னேரம் வழமை போன்று பாஸியா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

தென் இந்தியா மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் பிரபல இஸ்லாமிய மார்க அறிஞர் மெளலவி அல் உஸ்தாத் அல் ஹாஜ் ஹைதர் அலி (மிஸ்பாஹி) விஷேட சொற்பொழிவாற்றினார்.

கடந்த 04.09.2024 புதன் கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து அதிபர் மெளலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் (முய்யிதி)தலைமையில் மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்ற மஜிலிஸ் இல் கலீபாக்கள், உலமாக்கள் கலாபீட விரிவுரையாளர்கள் , மாணவர்கள் , நிர்வாகிகள் இஹ்வான்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

(பேருவலை பீ.ம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *