உள்நாடு

கல்குளம் விபத்தில் நால்வர் காயம்..!

அனுராதபுரம் கண்டி பிரதான வீதியில் கல்குளம் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக திறப்பனை பொலிசார் தெரிவித்தனர்.

அதி வேகமாக பயணித்த சிறிய ரக வான் எதிரே அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதித்தடுப்பு மீது மோதுவதை தவிர்ப்பதற்கு முயன்ற போது வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் வான் சாரதியும் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *