உள்நாடு

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

க. பொ.த சாதாரண தர மாணவர்களை இலக்காகக் கொண்ட இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 14.09.2024 கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2006 ஆம் ஆண்டு அல் பத்ரியா மகா வித்தியாலயம் சார்பாக க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவினரால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் வளவாளராக உளவியலாளர் எம். ஐ அஹமட் இப்திகார் அவர்கள் கலந்து கொண்டார்.

அல்பத்ரியா மகா வித்தியாலயம், முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம், அரபா மகா வித்தியாலயம் மற்றும் ஒக்ஸ்போர்ட் சர்வதேசப் பாடசாலை ஆகிய பாடசாலைகளிலிருந்து சுமார் 100 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

எஸ்.ஏ.எம். பவாஸ்
தகவல் அதிகாரி
அரசாங்க தகவல் திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *