உள்நாடு

பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் நடாத்திய மீலாத் விழா

பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத்தும் மீலாத் விழா மற்றும் மெளலித் மஜ்லிஸ் 16 ஆம் திகதி திங்கட்கிழமை காலை பேருவளை நவீன சந்தை கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் நடைபெற்றது.

பேருவளை ஐக்கிய தேசியக் கட்சி பிரதம அமைப்பாளரும் முன்னாள் நகர பிதாவுமான மஸாஹிம் முஹம்மத் பேருவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கயன்த வடகெதர, பேருவளை நகர சபை, பேருவளை பிரதேச செயலக உயர் அதிகாரிகள் பலரும் இங்கு உரை நிகழ்த்தினர்.

முகத்த முஷ்ஷாதுலி முர்தாஜ் ஸமீம் மற்றும் உலமாக்கள், வர்த்தகர்கள், மத்ரஸா மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன உறவை கட்டியெழுப்பும் வகையில் ஏனைய சமூகங்களையும் அழைத்து இவ்விழாவை சிறப்பாக நடாத்த வர்த்தகர்கள் மேற்கொண்ட முயற்சியை இங்கு பலரும் பாராட்டினர்.

சிறார்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டதோடு அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *