உள்நாடு

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக, பச்சை – வெள்ளை நிறத்தில் ஒளிரும் தாமரைக் கோபுரம்..!

பல வர்ணங்களில் ஒளிரும், கொழும்பு தாமரைக் கோபுரம், இன்று (16) திங்கட்கிழமை இரவு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் மாத்திரம் ஒளிரும் என, தாமரைக் கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர்களை கௌரவிக்கும் முகமாகவே, இன்று (16) மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, இவ்வாறு பச்சை – வெள்ளை நிறங்களில் மாத்திரம் தாமரைக் கோபுரம் ஒளிரும் என, தாமரைக் கோபுர நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *