உள்நாடு

மக்கள் மறுமலர்ச்சி முன்னணிஅமைப்பினால் தரம் 5 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி என்ற அமைப்பினால் தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையை சுமார் 31 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வைத்தார்கள்

அதில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 12.09.2024 வியாழக்கிழமை நுஃமான் மண்டபத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் கல்விக்குழு தலைவர் அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 31 பாடசாலைகளிலும் அதிக புள்ளிகள் எடுத்த முதல் மாணவனுக்கான சான்றிதழ் பதக்கம் மற்றும் நினைவுச் சின்னம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது மற்றும் அவரால் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *