உள்நாடு

பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பள்ளியில் நாளை மீலாத் பரிசளிப்பு விழா..!

பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீளாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நாளை 16ம் திகதி திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் செயலாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்
இதன்போது பறகஹதெனிய மத்ரசதில் ஜாமி உல் அன்வர், சிங்ஹபுர மத்ரசதுர் ரஹ்மானியா, பண்டாரகல மஸ்ஜிதுன் நூர் ஆகிய குர்ஆன் மதரஸா மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(ஏ.எஸ்.எம். ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *