உள்நாடு

வார இறுதி விடுமுறைக்காக விசேட போக்குவரத்துச் சேவை

வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்குச் செல்வோருக்காக, நேற்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணையின்றி மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இன்றும், நாளையும் இரவு வேளைகளில், பதுளையிலிருந்து கொழும்பு வரை, விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக, ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *