விளையாட்டு

டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கை வந்தடைந்தது நியூலிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இன்று (14) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறுகின்றது. இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதுடன் முதல் போட்டி வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் போட்டி இடம்பெறாமல் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *