உள்நாடு

காட்டு யானையுடன் மோதல்; பொலிஸ் சார்ஜன்ட் படுகாயம்

மிஹிந்தலை திருகோணமலை வீதியில் மஹாகனந்தராவ வாவிக்கு அருகில் காட்டு யானை ஒன்றுடன் மோதி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் எஸ்.கருணாரத்ன என்ற 54 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே காயமடைந்துள்ளார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடமைக்கு சென்றுகொண்டிருக்கும் போது மஹாகனந்தராவ வாலிக்கு அருகில் வீதியை கடந்த காட்டு யானையுடன் மோதி காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்த சார்ஜன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *