உள்நாடு

அனுரவை ஆதரித்து பேருவளையில் இன்று கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஆதரித்து பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் 13 ஆம் திகதி மாலை 7:30 மணிக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம் பெறும்.

பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் அரூஸ் அஸாத் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். நளிந்த ஜயதிஸ்ஸ, கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட பலரும் உரையாற்றவுள்ளனர்.

பேருவளை தொகுதியில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் மேலும் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரூஸ் அஸாத் தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *