உள்நாடு

முஸ்லிம் திணைக்கள பணிப்பாளரால் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு கையளிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இலங்கை இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்ஆன் பிரதிகளின் ஒரு தொகை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு இன்று (13) கையளிக்கப்பட்டன.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தர் அல்ஹாஜ் ஸுஹைருல் அஸ்மி அவர்களிடம் இந்த பிரதிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உதவி பணிப்பாளர் என்.நிலூபர் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் முப்தி முர்சி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *