உள்நாடு

நூறு மாணவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி முகாம்

மட்டக்களப்பு மஞ்சந் தொடுவாய் ANAYA Soccer Academy யின் ஐந்தாவது ஆண்டை முன்னிட்டு ஆறு பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி முகாம் ஒன்றினை நடத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை ( 12) மஞ்சந்தொடுவாய் தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. ஆதம் லெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இக்றஹ் வித்தியாலய அதிபர் ஏ.பி. ரசூல் மற்றும் ANAYA Soccer Academy யின் தலைவர் எம். அனீஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வையடுத்து மாணவர்களுக்கான ஆரம்ப பயிற்சியும் , வழிகாட்டலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *