உள்நாடு

அநுர குமார ஜனாதிபதியானால், ‘இந்திய – சீன’ மோதலுக்கு இலங்கை முகம் கொடுக்க வேண்டி வரும்

சி.வி. விக்னேஷ்வரன் எச்சரிக்கை

“அநுர குமார ஜனாதிபதி பதவிக்கு எவ்வகையிலும் தகுதியில்லாதவர்” என, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறுகையில்,
“அநுர குமார ஆட்சிக்கு வந்தால், அவரால் பொருளாதாராத்தை
ஒருபோதும் முன்னெடுத்துச் செல்ல முடியாது” என்று சுட்டிக் காட்டினார்.

“மேலும், அநுர குமார ஜனாதிபதியானால், ‘இந்திய – சீன’ மோதலுக்கு இலங்கை முகம் கொடுக்க வேண்டி வரும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *