உள்நாடு

ஒலுவில் அல்-ஹம்றா மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான பயிற்சி நெறி..!

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி நெறி 29.08.2024 ம் திகதி மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய மாணவர்கள் 35 பேர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பெற்றனர். இன் நிகழ்வு பொலிஸ் கெடட் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான திரு.சிந்தக குணரத்னவின் தலைமையில் உயர் பயிற்சி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அவர்கள் கலந்து கொண்டார்.

(இஸட்.ஏ.றஹ்மான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *