உள்நாடு

“சிதம்பரா கணிதப்” போட்டியில் அய்மன் சிறப்புச் சித்தி

கலேவெல – தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவி மொஹமட் சமீர் அய்மன், உலகலாவிய ரீதியில் நடைபெற்ற ‘சிதம்பரா கணிதப்’ போட்டிப் பரீட்சையில் பங்குபற்றி வெற்றி ஈட்டியுள்ளார்.இம்மாணவி, யாழ்ப்பாணம் சிதம்பராக் கல்லூரியில் (2024.08.24 திகதியன்று) இதற்கான வெற்றிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசில் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையிலும், இம்மாணவி 161 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவி, தேவஹூவயைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் மொஹமட் சமீர் – ஆசிரியை நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்கா தம்பதியினரின் மூத்த புதல்வியுமாவார்.


( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *