உள்நாடு

சிறுவர் காப்பகத்தில் இருந்து காணாமற் போன மூன்று சிறுமிகள் மீட்பு..!

மாத்தளை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப் பட்ட விசாரணைகளில் இருந்து சிறுமிகளை கண்டு பிடித்துள்ளனர்.

09 ம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயதுடைய இரு சிறுமிகளும் 11ம் தரத்தில் கல்வி பயிலும் 17 வயதுடைய சிறுமியொருவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சிறுமிகள் மூவரும் தற்போது கெக்கிராவ பொலிசாரின் பாதுகாப்பில் இருப்பதுடன் விசாரணைகளின் பின்னர் அவர்கள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என கெக்கிராவ பொலிசார் தெரிவித்தனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *