உள்நாடு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றிக்காக அணிதிரன்ட கற்பிட்டி பிரதேச மகளீர் மத்தியில் ஹிருனிக்கா

கற்பிட்டி நுரைச்சோலையின் விவசாய செழுமை மிக்க கிராமமான எலந்தையடியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக நுரைச்சோலையின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான நலின் தலைமையில் திங்கட்கிழமை (26) திரண்ட மக்கள் வெள்ளம்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான ஹெலிகாப்டர் அப்புஹாமி, ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ். எச்.எம் நியாஸ் என்.டி.எம் தாஹீர் , மற்றும் கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் ஆகியோரும் உரையாற்றினர்.

அத்தோடு கற்பிட்டி நகர ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம் எப்.எம் றில்மியாஸ் கலந்து கொண்ட மையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *