உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம்; இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று 28 ஆம் திகதி புதன்கிழமை கூடுகிறது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, இதுபற்றித் தெரிவிக்கும்போது, “உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் விவாதித்த பின்னரே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எப்போது நடாத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
( ஐ. ஏ. காதிர் கான் )