உள்நாடு

ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதியினால் உத்தரவு பிறப்பிப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், பொது ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக, ஆயுதப் படையினரை அழைக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கைக் கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் அழைப்பதற்கான உத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை, ஜனாதிபதி நேற்று (27) வெளியிட்டார்.

இதன்பிரகாரம், நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர் நீர் நிலைகளில் பொது ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு ஆயுதப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *