அநுராதபுரத்தில் நடைபெறும் தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிக்கு தெரிவானது பதுளை அல் அதான்
ஊவா மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்குற்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டத் தொடரில் பதுளை அல் அதான் முஸ்லிம் வித்தியாயம் 2ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானது.
கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊவா மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட ஆண்களுக்கான 16 வயதிற்குட்பட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் போராடித் தோற்றிருந்த பதுளை அல் அதான் முஸ்ரிம் வித்தியாலம் 2ஆம் இடத்தினைப் பெற்று வரலாறு படைத்ததுடன் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் கால்பதித்து அசத்தியது.
மேலும் 16 வயதிற்குற்பட்ட அணி மாத்திரம் இன்றி அப் பாடசாலையின் 20 யதிற்குற்பட்ட அணி ஏற்கனவே தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.கே.எம்.நியார்- பதுளை)