உள்நாடு

மாணவன் உமர் வபா கணித அறிவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்..!

லண்டன் சர்வதேச சிதம்பரா நிறுவனம் அகில இலங்கை ரீதியில் நடத்திய கணித அறிவுப் போட்டியில் மா வனல்லை ஹெம்மாதகம கே /பள் ளிப்போருவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற் கும் உமர் வபா எனும் மாணவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவர் மாவனல்லை ஹெம்மாதகம பகுதியை சேர்ந்த மொஹமட் வபா (வர்த்தகர்) அஸ்மியா (ஆசிரியை)  தம்பதிகளின் கனிஷ்ட புதல்வர் ஆ வார்.தரம் 5 புலமை பரிசில் பரீட்சை யிலும் திறமையாக சித்தியடையச் செய்து (187 புள்ளிகள்) இம்மாணவ னை திறமையாக உருவாக்க பாடுப ட்ட இப்பாடசாலை அதிபர் கற்பித்த மற்றும் சகல உற்சாகத்தையும் வழ ங்கிய இப்பாடசாலை ஆசிரியர்கள் உட்பட ஒத்துழைப்புகளை வழங்கி ய அனைவருக்கும் போட்டியை நட த்திய சர்வதேச சிதம்பரா நிலையத்திற்கும் மாணவனின் பெற்றோர் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைப் பகிர்ந்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியாக நடத்தப்ப ட்ட இப்போட்டியில் கணித அறிவுடைய கணிசமான மாணவர்கள் பங்குபற்றியதுடன் இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் களை பாராட்டும் நிகழ்வு (24) யாழ்ப்பாண முத்து மாரியம்மன் ஆலய பிரதான மண் டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *