உள்நாடு

பலஸ்தீன் மக்களின் உரிமைக்காக நாம் என்றும் முன்நிற்போம்..! -ஏராவூரில் சஜித் பிரேமதாச

எமது பயணத்தில் தேசிய ஒற்றுமையே பிரதான இலக்காகும். இன,மத, குல, கட்சி பேதங்களை கடந்து தேசிய கொள்கை திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வோம். நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் உள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை எரிப்பதா புதைப்பதா என்கின்ற பிரச்சினை தோன்றிய போது முஸ்லிம் மக்களுடைய நல்லடக்கத்திற்கான உரிமைக்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்நின்றது. WHO வின் பரிந்துரைகமைய நல்லடக்கம் செய்ய முடியும் என்ற நிலைப்பாடு வந்தபோது நாமும் எமது உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக இருந்தோம். இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படைக் கொள்கையாக கொண்டு அரசாங்கம் செயல்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 18 ஆவது வெற்றிப் பேரணி நேற்று(26) மாலை மட்டக்களப்பு ஏராவூர் நகரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்குமான உரிமையை நாம் வழங்குவோம்.

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ள பலஸ்தீன மக்களுக்காக நானும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் முன் நின்றிருக்கிறோம்.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கு பலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்வதற்கான உரிமை இல்லை. இந்த இரண்டு நாடுகளும் நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் சமாதானமாக வாழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *