உள்நாடு

ஆலங்குளம் பிரதேசத்தில் போதை வியாபாரிகள் கைது

கெப் வாகனம் ஒன்றில் 500 கிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற போதைப்பொருள் வியாபாரிகள் இருவரை மரதண்கடவல ஆலங்குளம் பகுதியில் கொழும்பு மத்திய வட்டார குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (26) கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 34 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் வியாபாரிகள் அனுராதபுரம் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு மத்திய வட்டார குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் கே.பியந்த உள்ளிட்ட குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்களையும் கெப் வாகனத்தினையும் கொழும்பு மத்திய வட்டார பிரிவினர் மரதண்டவல பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன்.சந்தேக நபர்கள் இன்று (27) நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மரதண்டவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *