உள்நாடு

சஜித்தின் வெற்றிக்காக தமிழ் முஸ்லிம் மக்கள் கைகோர்க்க வேண்டும்..! -சம்மாந்துறை கூட்டத்தில் ஹக்கீம் அழைப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஊழல் அற்ற தலைமையொன்றை நாட்டு மக்கள் தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் மக்கள் உள்ளார்களென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய் கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் உரையாற்றினார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் :
இளைய தலைமையொன்று இந்த நாட்டை புதிய யுகத்துக்கு அழைத்துச்செல்வதற்கான தலைமையொன்றை வேண்டி நிற்கின்றது. இதற்கான தெரிவின்போது ஆரம்பத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாகவே ஆதரவளித்தது. இதேநேரம் ஆதரவளித்த அன்றிலிருந்து இடைஇடையே இந்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அணி பிரிந்து உள்ளகப ;பிரச்சினை உருவாகிவிடும் என்றெல்லாம் கதையளந்து கொண்டார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு நன்றி கூறவேண்டும். இவர்களின் உறுதி காரணமாக எங்கள் சக கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எங்களது முடிவுடன் இணைந்து வந்துள்ளார்கள். கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நான் போகும்போதும் குறிப்பாக சிங்கள பிரதேசங்களில் சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயப்படுத்தப்பட்டதாக தென்;படுகிறது.
இதேவளை,எமது தமிழ் சகோதரர்கள் கடந்த முறை அம்பாறையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள். அதற்கான ஆசனத்தை அவர்கள் பெறவேண்டும். அதேவேளை, தமிழ் முஸ்லிம் மக்களிடமுள்ள முரண்பாடுகளைப் பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும். வெறும் இனவாதம் பேசி அல்லது கிறுக்குத்தனமாக பேசி அல்லது சவால் விட்டுக் கொள்வதால் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வைப்பெற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் ஆதரிக்கின்ற தலைமையோடு தமிழ்மக்களும் கைகோர்க்க வேண்டும் என்னும் வினையமான வேண்டுகோளை சம்மாந்துறை மண்ணிலிருந்து வேண்டுகோள் விடுக்க விரும்;புகின்றேன். மட்டக்களப்பில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றார்கள் அம்பாறையில் முஸ்லிம்களாகிய நாங்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றோம். ஆங்கெங்கே எல்லாம் பெரும்பாண்மையாக வாழ்கின்றோமோ அங்கெல்லாம் பெருந்தன்மையாகவும் விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாராக வாழவேண்டும். குறிப்பாக சேதமில்லாத விட்டுக் கொடுப்புகளுக்கு முன்வரவேண்டும். அதேநேரம் எல்லோரையும் சமத்துவமாக நடத்துகின்ற தேசிய தலைமையை ஒன்றிணைந்து தெரிவு செய்யவேண்டும். ஓன்றிணைந்த அந்த தெரிவு சஜித் பிரேமதாசவாக இருக்கவேண்டும்.
சஜித்தின் வெற்றியில் முஸ்லிம்கள் மாத்திரமல்ல தமிழர்களும் இணைந்து அவரின் வெற்றியின் பங்காளிகளாக வரவேண்டும்.இந்த மண்ணில் சமத்துவம் நீதி நேர்மையான அரசியல் தொடரவேண்டும். ஆளுக்காள் பழிவாங்கும் குதர்க்கமாகப் பேசும் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை.
ஒரு தேசியத் தலைமையை ஏளனமாக பேசுவதையும் சிலருக்கு கை வந்த கலையாகும்.ஆனால் அவர்கள் அதை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *