உள்நாடு

தாய்மண் திரும்பிய சஹ்மி ஷஹீத் – பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஆரவார வரவேற்பு

சஹ்மி ஷஹீத் இலங்கை நாட்டை ,தனி நபராக நடந்தே சுற்றி வரும் அசாத்திய முயற்சியில் ஈடுபட்டு கடந்த 26 ஆம் திகதி அதனை சாத்தியமாக்கி தனது நாட்டைச் சுற்றும் நடைபயணத்தை வெற்றிகரமாக தாய்மண் பேருவளையில் முடித்தார்.

சஹ்மியை வரவேற்பதற்காக பேருவளையின் ஒட்டுமொத்த மக்களும் பேருவளை நகரில் திரண்டதோடு,பல்லாயிரக்கணக்கான மக்களின் கோசங்களுடன் ,தான் பயணத்தைத் துவங்கிய சிமி ஹோல்டிங் காட்சியறை வளாகத்தில் தனது பயணத்தை முடித்து ,அந்த இடத்திலேயே இறைவனைத் தொழுது நன்றி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து,பேருவளை கடற்கரை மைதானத்தில் மேடையேறிய சஹ்மி சஹீத் பொதுமக்கள் முன் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வுரையில், சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்களுக்கும், அனைத்து இலங்கை மக்களுக்கும்,ஒருங்கிணைப்பாளர்களுக்கும்,ஊடகங்களுக்கும்,இலங்கை பாதுகாப்பு துறையினருக்கும் என அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு ,பயணத்தின் அனுபவங்களையும் மக்கள் முன் பகிர்ந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து,சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்களால் சஹ்மி சஹீதிற்கு ,இலங்கை வரைபட வடிவிலான தங்கப் பதக்கம் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது,மேலும் பல்வேறு உம்ரா நிறுவனங்கள் சார்பாக உம்ரா செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதோடு,ரூமி ஹாஷிம் கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி ரூமி ஹாஷிம் அவர்கள் பெறுமதியான மடிக்கணினி ஒன்றும்,பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் தர்ம கர்தா அல்ஹாஜ் ஜாபிர் மற்றும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் அம்ஜாத் உட்பட பலராலும் பணத்தொகைகள் உட்பட பல அன்பளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்,பேருவளை வரலாற்றில் முதல் தடவையாக பாரியதொரு மக்கள் தொகை பேருவளை கடற்கரை மைதானத்தின் திரண்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் சஹ்மியை சந்தித்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

 

பேருவளை : பீ.எம் முக்தார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *